அனில் குமார்: சுவாமி! உங்களுடைய எல்லையற்ற கருணையினாலும் இரக்கத்தாலும் நாங்கள் உங்கள் சன்னிதியில் இருக்கிறோம். எங்களையெல்லாம் உங்கள் ஆசிகள் இங்கே கொண்டுவந்திருக்கின்றன. உங்கள் தெய்வீக தர்சனம், ஸ்பர்சனம், சம்பாஷணம் ஆகியவை பொழியும் சூரிய ஒளியில் நாங்கள் ஆனந்திக்கிறோம். அப்படியிருந்தாலும் எங்களுக்கு முன்ஜன்மங்களின் புண்ணியமும் நல்வினைகளும் தேவையா?

பகவான்: இப்போதைய ஆனந்தம் முந்தைய ஜன்மத்தின் புண்ணியம் இரண்டுமே முக்கியம், அவை ஒருசேர அமையவேண்டும். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த உதாரணத்தைக் கவனி. இங்கே மணற்பாங்கான நிலம் உள்ளது. பலத்த மழை பெய்தால் மண் நீரை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. உங்கள் நிலைமைமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! உங்கள் கருணை எங்களுடைய விதியை, பிராரப்த கர்மத்தை என்ன செய்கிறது?

பகவான்: கடவுளின் கருணையும் கடவுளின் சங்கல்பமும் எதையும் மாற்றமுடியும். கடவுள் அன்புமயமானவர். அவரது அளவற்ற பரிவு உங்கள் பிராரப்த கர்மம் அல்லது முந்தைய ஜன்ம வினைப்பயன்களை மாற்றச் செய்கிறது. ஒரு பக்தன் தனது மனச்சிறையில் கடவுளைச் சிறைப்படுத்திவிட முடியும். இவ்வுலகில் பக்தியால்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! எங்களுடைய பாக்கியம் அளவற்றது, எத்தனை பேருக்கு இந்த வாய்ப்புக் கிடைக்கும். இதெல்லாம் உங்கள் கருணையே. இதை நாங்கள் எப்படித் தக்கவைத்துக்கொள்வது?

பகவான்: பார்! லட்சக்கணக்கான பக்தர்களில் எத்தனை பேரால் இங்கே இருக்க முடிகிறது? இவ்வளவு அணுக்கம் எல்லோருக்கும் சாத்தியமா? கடந்த ஜன்மங்கள் பலவற்றில் செய்த புண்ணியம் உங்களுக்கு இந்த பாக்கியத்தைக் கொடுத்துள்ளது. நமது கல்விநிலையங்களில் உள்ள சில ஆயிரம் மாணவர்களில் எத்தனை பேருக்குமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! நாம் ஏன் இறையருளைப் பெறுவதில்லை?

பகவான்: அப்படி எண்ணுவது தவறு. அப்படி நீ நினைத்தால் அது தவறு. எல்லோருக்கும் கிடைக்கும்படிச் சமமாகவே இறையருள் இருக்கிறது. ஜாதி, மதம், பால், தேசம் என்கின்ற வித்தியாசங்களை அவர் பார்ப்பதில்லை. குறைபாடு உன்னில்தான் இருக்கிறது என்பதை நீ அறியவேண்டும். உன் இதயமென்னும்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0